May 26, 2026 - 11:46 PM -
0
பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் மாணவர் வசதிகள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு கோரி, பேராதனை பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேரணி ஒன்றாம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) பிற்பகல் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி காரணமாக, பேராதனையிலிருந்து கம்பளை வரையான வீதியின் ஒரு போக்குவரத்துப் பகுதி மூடப்பட்ட நிலையில் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

