Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மரண நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

Sep 10, 2026 - 08:30 PM

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மரண நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
Mobitel Inner 1278

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்க முடிந்த மிகப்பெரிய நிவாரணம் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழந்த 50 புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடாக 7 கோடி ரூபா தொகையை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் ஒருவருக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் 6 இலட்சம் ரூபா தொகையே வழங்கப்பட்டு வந்தது. 

அத்தொகை போதுமானதாக இல்லாததால், அதனை 20 இலட்சம் ரூபா வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். 

வருடாந்தம் வெளிநாடு செல்லும் பணியாளர்களில் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணங்களால் அவர்களில் சுமார் 250 பேர் வரை ஆண்டதோறும் உயிரையிழக்கின்றனர். 

இந்நிலையைக் குறைப்பதற்குத் திட்டங்களுடன் கூடிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார். 

"வெளிநாட்டுப் பணியாளர்கள் ஆண்டதோறும் இந்நாட்டுக்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பணவனுப்பல்களாக (Remittances) வழங்குகின்றனர். அவர்களுக்காக மிகப்பெரிய அளவிலான நலன்புரி வசதிகளைப் பணியகம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவதைப் போல, நாங்கள் மேலும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் ஒரு திட்டம்தான் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வீடமைப்புக்கடனாக வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபா தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகும். குறைந்த வட்டியில் இந்தக் கடன் வழங்கப்படுவதோடு, பணியகமும் அந்த வட்டியில் ஒரு பகுதியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் வருடாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு போன்ற நலன்புரி வசதிகளைப் பணியகம் ஏற்கனவே பணியாளர்களுக்காக வழங்கி வருகிறது."என்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

தீர்த்த திருவிழா!

தீர்த்த திருவிழா!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

சிங்காரவத்தை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

Mobitel 1278