Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

Sep 12, 2026 - 08:20 PM

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?
Mobitel Inner 1278

தெஹிவளை வீடொன்று மீது நேற்றைய தினம் (11) கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

பாதாள உலகக் கும்பல்களுக்கிடையேயான மோதல்களின்போது கைக்குண்டுகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது இதன்போது தெரியவந்துள்ளது.

 

இதனிடையே, தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் வீட்டு உரிமையாளரின் காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அந்தச் கால் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

 

அவர்களின் தந்தைக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்பட்ட காயம் காரணமாக அந்த கால் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இரு தரப்பினரிடையே நிலவும் மோதலே இந்தத் கைக்குண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என்பதைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

 

அதற்கமைய, படோவிட்ட அசங்க  எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தரப்பிலிருந்து பலிகொள்வதற்காகக் குடு அவிஷ்க என்பவரின் தரப்பு இத்தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அது தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், தாயின் அன்பையும் இழந்து தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த 17 வயது கசுன் ரஷ்மிக மற்றும் அவரது சகோதரரான 11 வயது துமிந்து கிஹான் ஆகிய இருவராவர்.

 

உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் இன்று இரவில் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு எடுத்துவரப்படவுள்ளன.

 

இதனிடையே, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் போது, இச்சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

கடந்த காலங்களில் கடல் வழியாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் சில கைக்குண்டுகளும் நாட்டின் குற்றக் கும்பல்களுக்குக் கிடைத்துள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.

 

இதனிடையே, வெளிநாட்டுத் தயாரிப்பான கைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் நபரொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் குளியாப்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278