Sep 15, 2026 - 07:18 PM

உலக ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டித் தொகுதியொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்குத் திரும்பும் வழியில், ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று (15) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்த பின்னர் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ருமேஷ் தரங்க, சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்வதற்குப் பயன்படுத்திய தனது ஈட்டியும் உடைந்திருப்பதாகவும், இதனால் தான் மிகுந்த கவலையடைவதாகவும் தெரிவித்தார்.
வரவிருக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2027 இல் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி மற்றும் 2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்த ஈட்டிகளைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவற்றை நினைவுகளாகத் தன்வசம் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து துருக்கி ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான TK 730 என்ற விமானத்தில் அவர் இன்று அதிகாலை நாட்டிற்கு வந்தடைந்ததுடன், தனது ஈட்டித் தொகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ருமேஷ் தரங்க தெரிவித்தார்.





























