Header Logo
இந்தியா
இந்தியாவில் கோர விபத்து - 18 பேர் பலி

Nov 2, 2025 - 10:10 PM

இந்தியாவில் கோர விபத்து -  18 பேர் பலி
Mobitel inner

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் பலோடி மாவட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் குறைந்தபட்சம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் மூவர் படுகாயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள பலோடி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. 

விபத்தில் சிக்கிய பயணிகள், பிகானரில் உள்ள முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான கோலாயத் தளத்தை தரிசித்துவிட்டு, ஜோத்பூரில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான சூர்சாகரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara