Header Logo
செய்திகள்
கடந்த 09 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு

Aug 10, 2026 - 10:04 AM

கடந்த 09 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு
Mobitel inner

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 89,639 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 

மாதாந்தத் தரவுகளின்படி, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அம்மா மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 29,973 ஆகும். 

இதற்கு மேலதிகமாக ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 6,013 நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 5,721 நோயாளர்களும் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 5,651 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

ஓகஸ்ட் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 4,292 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நாட்டின் மாகாணங்களில் மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 52.93 சதவீதமான, அதாவது 47,445 நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக தென் மாகாணத்தில் 13,302 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,971 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,383 நோயாளர்களும், வடமேல் மாகாணத்தில் 4,465 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 3,703 நோயாளர்களும், ஊவா மாகாணத்தில் 2,482 நோயாளர்களும், வடமத்திய மாகாணத்தில் 1,574 நோயாளர்களும் மற்றும் வட மாகாணத்தில் 1,314 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

மாவட்ட மட்டத்தில் பார்க்கும் போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும். 

கொழும்பு மாவட்டத்தில் 17,765 நோயாளர்களும், கண்டியில் 6,366 நோயாளர்களும், மாத்தறையில் 5,953 நோயாளர்களும், களுத்துறையில் 5,841 நோயாளர்களும், காலியில் 4,936 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,860 நோயாளர்களும் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தில் 3,613 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

தற்போது உயிரிழப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் மேலும் 119 வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


MOST READ
02
நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது   கொழும்பின் மிக முக்கியமான வணிகப்

நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது கொழும்பின் மிக முக்கியமான வணிகப்

Aug 10, 2026 - 11:04 AM


காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara