Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம்

Sep 14, 2026 - 11:29 PM

 எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம்
Mobitel Inner 1278

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் மற்றும் பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகளின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, இன்று (14) மொறட்டுவை பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "கல்வியினூடாக நாம் எதிர்பார்ப்பது தற்கால சமூகத்தைப் புரிந்துகொண்டு, அச்சமூகத்தைச் சிறந்த பாதையில் வழிநடத்தக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதேயாகும். அந்தப் பாரிய கடமைக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்திவரும் இந்த மாற்றத்திற்கான தருணத்தில், இத்தகைய பாடசாலைகள் விசேட கடமையொன்றை ஆற்ற வேண்டியுள்ளது. 

அதாவது அரசாங்கம் என்ற வகையில் நாம் மனித வளத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்திருக்கின்றோம். அப்பயணத்தில் கல்வி மீது நாம் விசேட கவனத்தைச் செலுத்தியிருக்கின்றோம். நாம் முறைமைக்கு அமைவாகக் கல்விக்காக ஒதுக்கும் தொகையை ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்திலும் அதிகரித்துவருகின்றோம். 

எனினும், அந்தச் செயன்முறை இலவசக் கல்வியை உருவாக்கியபோது இருந்த தத்துவத்தில் உள்ளடங்கியுள்ள அனைத்துக் கோட்பாடுகளையும் உள்ளடக்கும் வகையில் இடம்பெற வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்பு உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

Mobitel 1278